CHARAACHARAM


சராசரம் உன்னை யாவும் தேடுமே...

மறைகளும் மகிழ்ந்துன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !


நிராசையால் நைந்த என் நெஞ்சமும்

பராவும் உன் பாதாரவிந்தமே !

---------

உன்னையே எனதுயிர் துணை என்று

உவந்ததென் தவறோ ஐயா !

கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ

கதி உன் கழலின் நிழலே அன்றோ !


வானகம் வையகம் தரும் இன்பங்களைக்

கருதியதும் உண்டா?

இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !


இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !

அனலில் மெழுகென அகமும் உருகும் !

"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !

இதயமும் பதறும் ஐயா !


பாத மலரில் படிந்திடும் வண்டாய்

நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !

அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்

அடைக்கலம் ஐயா !

-----------------------------------------------------------------------


4 mins 19 secs


VIDEO CLIP UPLOAD BY RAJA VENKATARAMAN AT https://youtu.be/Ewu6fdvK0Tw