காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் !
கல்லும் கனியும் கீதம் !---
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் !
பண்ணொலி பொங்கிடும் கீதம் !
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம் !
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்!
------------------------------------------------
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்,
வான வெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன்! மாயபிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
------------------------------------------------
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவும் நதிக்கரையில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான் !
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகும என் உள்ளம் !
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான் !
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகும என் உள்ளம் !