நந்த குமாரன்
விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ !
பிருந்தாவனத்தில்
கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ !
அந்த நாளும் வந்திடாதோ !
அனைவரும் கூடி,
அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா
நதியினில் ஆடி
.வனம் வழி திரிந்து .
.. வரதனைத்தேடி
அனுதினம் அமுதனை
தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ !
( there is a saxophone interlude here barely for a few seconds..
A stroke of genius by S.V.Venkataraaman).
வானவர் நாணிடும்
மங்கையரோடு ,
மா தவத்தோரும்
மயங்கிடுமாறு ,
தேனின் இனித்திடும்
தீங்குழலூதி ,
மானிடமே அதி
மேலெனச்செய்தான் !
--
கானகம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில்
மேயத்திட அன்று
புனித மேனியில்
புழுதியும் கண்டு
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை
விழைந்ததும் உண்டு !
போதமில்லா ஒரு
பேதை மீரா !
பிரபு கிரிதாரி ,
ஹ்ருதய சஞ்சாரி !
வேதம் வேதியர்
திரிசனும் தேடும்
வேதம் வேதியர் திரிசனும் தேடும்
பாத மலர்கள்
நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ !
=
=