ANTHA NAALUM






3 mins 25 secs


அந்த நாளும் வந்திடாதோ !
       நந்த குமாரன் 
            விந்தை புரிந்த 
அந்த நாளும் வந்திடாதோ !

பிருந்தாவனத்தில்  
              கண்ணன்  வளர்ந்த 
அந்த நாளும் வந்திடாதோ !
 

அனைவரும்  கூடி, 
             அவன் புகழ் பாடி 
நிர்மல   யமுனா 
           நதியினில் ஆடி 
.வனம் வழி  திரிந்து .
      ..   வரதனைத்தேடி 
அனுதினம் அமுதனை 
         தரிசனம் செய்த 

அந்த நாளும் வந்திடாதோ !

( there is a saxophone interlude here barely for a few seconds.. 
A stroke of genius   by  S.V.Venkataraaman).

வானவர்    நாணிடும்   
                      மங்கையரோடு ,
மா   தவத்தோரும் 
                  மயங்கிடுமாறு ,
தேனின்  இனித்திடும் 
                  தீங்குழலூதி ,
மானிடமே அதி
                 மேலெனச்செய்தான் !
--
கானகம் சென்று 
                   ஆநிரை கன்று 
கருணை மாமுகில் 
                   மேயத்திட அன்று 
புனித மேனியில் 
                  புழுதியும் கண்டு 
     புனித மேனியில் புழுதியும் கண்டு 
வானோர் பூமியை     
 விழைந்ததும் உண்டு !

போதமில்லா ஒரு 
         பேதை மீரா !
பிரபு கிரிதாரி ,
        ஹ்ருதய சஞ்சாரி !
வேதம் வேதியர் 
         திரிசனும் தேடும் 
      வேதம் வேதியர் திரிசனும் தேடும் 
பாத மலர்கள் 
              நோக நடந்த 
அந்த நாளும் வந்திடாதோ !

=